search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வாலிபர் கைது"

    • வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.

    கோவை:

    கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் சென்னையில் தங்கி வேலை பார்த்தார். அவருக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வித்யாதரன் (வயது 33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சூலூர் பெண்ணை வித்யாதரன் காதலிப்பதாக கூறினார். அவரது காதலை இளம்பெண் ஏற்கவில்லை.

    இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை எப்படியோ அறிந்து கொண்ட வித்யாதரன், இளம்பெண்ணை பழிவாங்குவது என முடிவு செய்தார்.

    இதன் ஒரு பகுதியாக அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவற்றை திருமணம் நிச்சயித்த வாலிபருக்கு செல்போன் மூலம் அனுப்பி வைத்து உள்ளார். எனவே இளம்பெண்ணின் திருமணம் பாதியில் நின்று போனது. இந்த நிலையில் வித்யாதரன் மீண்டும் சூலூர் பெண்ணுக்கு காதல் வலைவீசினார். அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை.

    அப்போது வித்யாதரன், உனக்கு நிச்சயித்த மணமகனுக்கு நான்தான் உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்தேன். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்ய விடமாட்டேன் என மிரட்டினார்.

    இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.

    இதையடுத்து வித்யாதரன் மீண்டும் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் இளம்பெண்ணிடம், நான் உன்னை இப்போதும் காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள் என்று மிரட்டி பார்த்தார். இளம்பெண் ஏற்கவில்லை.

    இதனால் வித்யாதரன் திருமணம் நிச்சயமான 2-வது வாலிபருக்கும் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் உடனடியாக திருமணத்தை பாதியில் நிறுத்தி விட்டார். எனவே பாதிக்கப்பட்ட இளம்பெண் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர். இதன்படி இளம்பெண் அந்த வாலிபருக்கு போன் செய்து, நான் உன்னை காதலிக்கிறேன். எனவே நீ உடனடியாக புறப்பட்டு கோவைக்கு வா என்று தெரிவித்து உள்ளார். அதன்படி வித்யாதரன் கோவைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    • தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.

    அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.

    நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.

    இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன் என்பவரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பதும் இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • போலீசார் விரைந்துவந்து வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    பெங்களூரு:

    பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சிலர் தனது உடைமைகளை இழந்துவிட்டதாக கூறியும், பர்சை தவற விட்டதாகவும் கூறி பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இத்தகைய மோசடி நபர்கள் தற்போது விமான நிலையம்வரை வந்து விமான பயணிகளிடமும் கைவரிசை காட்ட தொடங்கிவிட்டனர்.

    பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.

    அவரது நிலையை அறிந்த பலரும் அவரிடம் பணம் கொடுத்தனர். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சில பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பதும், தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது பர்சில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த 26 கிரெடிட் கார்டுகள் இருந்தன.

    சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த விக்னேஷ் கடந்த ஆண்டு சென்னை, ஐதராபாத், மும்பை விமான நிலையங்களிலும் இதுபோன்று பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் யாரும் அதுபற்றி புகார் செய்யவில்லை.

    மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணியிடம் வேலைக்கான இண்டர்வியூ செல்ல வேண்டும், எனது உடைமைகளை இழந்துவிட்டேன் என கூறி ரூ.8 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி அந்த பயணி கொடுத்த புகாரில்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×